இப்படி நாம் ஒருவரிடத்தில் நட்பு பாராட்டும்பொழுது அதன் எல்லை எதுவரை இருக்க வேண்டும் என்பதை நிறைய பேர் விவாதிக்கவே செய்கிறார்கள். இது அவரவரைப் பொறுத்ததாகவே நான் கருதுகிறேன். ஏனெனில், என் தோழனோ தோழியோ நான் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இருக்குமாயின் அதை அடுத்தவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் எந்த கட்டாயமும் இல்லை அல்லவா? ஒரு சிலருக்கு இப்படி நட்பு என்ற பெயரில் எல்லா விவகாரங்களிலும் நண்பர்கள் தலையிடுவது பிடிக்காது.
ஆழ்ந்த நட்புடனும் அன்புடனும் பழகும் உண்மையான நண்பர்கள் இதுதான் நமது எல்லை என்பதை வரையறுத்துக்கொண்டிருக்கமாட
நட்பு எனும் அழகான விஷயத்தை அனுபவிக்க வேண்டும். ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடாது. அப்படி ஆராய்ந்தால் அந்த நட்புக்கே கலங்கம் ஏற்படும். எப்போது ஒருவன் சுயநலமில்லாமல், எதையும் எதிர்ப்பார்க்காமல் ஒருவனிடத்தில் நட்பு கொள்கிறானோ அப்போதே அவன் நட்பின் புனிதத்தன்மையைக் காப்பாற்ற ஆரம்பிக்கிறான். உற்ற இடத்தில் தோள் கொடுத்து, உனக்காக நான் இருக்கிறேன், நானும் வரேன் என்று உணர வைத்து தலைநிமிர வைக்கும் நட்புக்கு கற்பு இருக்கிறது; எல்லை இல்லை என்றே நான் கருதுகிறேன்.
No comments:
Post a Comment