16 September 2010

குரோம், இன்டர்நெட் எக்ஸ்ப்லோர், பயர்பாக்சில் பிரைவேட் பிரவுசிங்



நீங்கள் எப்போதும் உங்கள் சொந்த கணினியிலேயே இணையத்தை பயன்படுத்துவீர்கள் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் அலுவலகங்களில் பிறர் கணினிகளையும், நண்பர்கள் கணினிகளையும், பிரவுசிங் மையங்களில் கணினிகளையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

பொதுவாக இணைய உலாவிகளில் நீங்கள் இணையதளங்களை பார்க்கும் போது நீங்கள் பார்த்த தளங்களின் ஹிஸ்டரி, தேடல் எந்திரங்களில் தேடிய தகவல்கள், தரவிறக்கிய கோப்புகளின் விபரங்கள் உள்ளிட்ட தடயங்கள் அந்த இணைய உலாவிகளில் சேமிக்கப்பட்டு விடும்.

உங்களுக்கு அடுத்து வருபவர் நீங்கள் உலவிய விபரங்களை கண்டு கொள்ள முடியும். சில நேரங்களில் பிறர் கணினிகளில் நாம் மின்னஞ்சல் பார்க்கும் போது நமது மின்னஞ்சல், பாஸ்வேர்டை கூட விட்டு வந்து விடுவோம். இது போன்றவை நமக்கு அசௌகரியத்தை தரும்.

இது போன்ற தருணங்களில் நமது இணைய உலாவிகளில் நமது செயல்பாடுகளின் தடயங்களை விடாது தனிப்பட்ட முறையில் உலவுவதற்குதான் பிரைவேட் பிரவுசிங் என்கிறோம். இது பாதுகாப்பானதும் கூட. இந்த வசதியை கூகிள் குரோம் இணைய உலாவி முதலில் அறிமுகப்படுத்தியது. தற்போது பயர்பாக்சின் புதிய பதிப்பான 3.6 லும் இந்த வசதி வந்து விட்டது. இதனை ஐஈ, குரோம், பயர்பாக்சில் எப்படி உபயோகிப்பது? என்று பார்ப்போம்.

மொசில்லா பயர்பாக்சில் :- பயர்பாக்சின் புதிய பதிப்பை (3.6 க்கு மேல்) நிறுவி இருப்பது அவசியம். Tools மெனுவில் Start Private Browsing என்பதனை கிளிக் செய்து கொண்டு இணையத்தில் உலவ ஆரம்பியுங்கள். நீங்கள் உலவிய தடயங்கள் எதுவும் பயர்பாக்சிலோ, நீங்கள் பயன்படுத்திய கணினியிலோ சேமிக்கப்படாது. 

கூகிள் குரோமில் :- குரோம் கன்ட்ரோல் மெனுவில் New incognito window என்பதனை கிளிக் செய்து கொண்டு பிரைவேட் பிரவுசிங் செய்ய துவங்குங்கள்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் :- இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 -ல் இந்த வசதி உள்ளது. Safety மெனுவில் InPrivate Browsing கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதியை பெறலாம். ஆனாலும் நான் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரை பரிந்துரைக்க போவதில்லை. இன்னமும் பாதுகாப்பற்ற கெட்ட இணைய உலாவியாகவே இது இருக்கிறது.

சீன கூகிள் ஹேக்கர்களால் தாக்கப்பட்டதில் இதில் உள்ள பாதுகாப்பு ஒட்டையையே பயன்படுத்தி உள்ளார்கள். இதை மைக்ரோசாப்ட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறது. மைக்ரோசாப்ட்டுக்கும் இணைய உலாவிக்கும் ஏழாம் பொருத்தம்தான். எப்போதும் மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் இருந்து விலகியே இருங்கள். இல்லையெனில் இணையத் திருடர்களுக்கு உங்கள் கணினி கதவை திறந்து வைத்து உள்ளீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கணினிகளை தவிர பிறரது கணினிகளில் நீங்கள் இணையத்தை உபயோகிப்பதாக இருந்தால் இந்த பிரைவேட் பிரவுசிங் முறையை பயன்படுத்துங்கள்.

நன்றி : tvs50.blogspot.com

11 September 2010

காதல் 8 வகை

காதலை 8 வகையாக பிரிக்கலாம். இதில் நீங்கள் எந்த வகைக் காதலர் என்று பார்க்கலாமா?

1. நீங்கள் விரும்புபவர் மீது உங்களுக்கு அன்பு, நேசம், இரக்கம் கொள்ளுதல் போன்ற உணர்வுகள் வருகிறதா? அவருடன் நெருக்கமாக இருத்தல், அவர் மனதில் இடம் பெறுதல், அவள் எனக்குச் சொந்தமானவள் போன்ற எண்ணங்கள் வருகிறதா? அவருக்கு உதவி செய்யும் எண்ணம், அவருடன் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை… இதெல்லாம் தோன்றுகிறதா? அப்படியானால் அவர் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்று அர்த்தம். இது காதலாகவோ, நட்பாகவோ மாறக்கூடும்.

2. நீங்கள் விரும்புபவரின் உடல்வாகில் ஈர்க்கபடுகிறீர்களா? அதனால் உங்கள் உணர்வு தூண்டபடுகிறதா, அவரிடம் தனிமையில் பேசும் எண்ணம் வருகிறதா? அப்படியானால் நீங்கள் காதலின் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறீர்கள். அவரின் அழைப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள், அவரை பற்றி எண்ணும் போதே இதயத்துடிப்பு எகிறுகிறது. …ம்…ம்… இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். சிற்றின்ப உணர்ச்சி, தொடுதல், முத்தமிடுதல் ஆகியவற்றை விரும்புகிறீர்களா? நீண்ட நேர பிரிவை தாங்க முடியவில்லையா? நிச்சயம் இது மோகக் காதல் தான். காதலில் மோகம் அதிகமாவது நல்லதல்ல. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.

3. அவள் மீது நட்பிருக்கிறது ஆனால் மோக உணர்ச்சி இல்லை. அன்பிருக்கிறது. எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பிருக்கிறது. ஆனால் அது உடல் ஈரப்பு சார்ந்ததல்ல. அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் வேறு எந்த விதமான ஆசைகளும் இல்லை என்று உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் காதல் ஆத்மார்த்தமான, மனிதநேயக் காதல். இந்த மேம்பட்ட எண்ணங்கள் உங்கள் விருப்பத்திற்குரியவரை மிகவும் கவர்ந்திழுக்கும். காதலை கனியச் செய்யும்.

4. நீங்கள் இருவரும் எந்த விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி பேசுகிறீர்கள். உங்கள் இருவரின் சிந்தனைகள் அதிகமாக ஒத்திருக்கின்றன. அன்பு, பிணைப்பு இருக்கிறது. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது. எண்ணங்கள், அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறீர்கள். அவருடன் இருக்கும்போது மனஇறுக்கம் இல்லாமல், கவலையற்று இருப்பதாகத் தோன்றுகிறது. அவர் மீது மதிப்பு, மரியாதை வைத்திருக்கிறீர்கள். அபடியென்றால் நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.

5.எல்லா நேரங்களிலும் அவருடனேயே இருப்பதை விரும்புகிறீர்கள், பரிசு பொருட்கள் கொடுப்பது, அவருடன் கனவில் சஞ்சரிப்பது, ஒன்றாகச் சாப்பிட விருப்பம், அவருடன் இருக்கும்போது மட்டும் ரிலாக்சாக இருப்பதாக உணர்கிறீர்களா? அவரின் உடல் அழகால் ஈர்க்கபடுவது, அவர் சமையலறையில் இருந்தாலும் அவருக்கு முன் இருக்க விரும்புவது, உங்கள் உலகமே அவரைச் சுற்றி இருப்பதாக நினைக் கிறீர்களா? காதல் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது, எதையும் மனம்விட்டு பேசுவது, உள்ளங்கையை வருடுவது, ஒன்றாக இசை கேட்பது என்று உங்கள் நேரம் கழிகிறதா? இவையெல்லாம் ரொமான்டிக் காதலின் உணர்வுகள். உங்கள் காதல் உன்னதக் காதலாக மாற வாய்ப்பிருக்கிறது.

6. அவளை பார்த்ததும் இதயத்துடிப்பு எகிறும். புது அனுபவமாகத் தோன்றும். நீண்ட நேர பிரிவை மனம் ஏற்றுக்கொள்ளாது. எல்லா நேரங்களிலும் அவள் நினைப்பாகவே இருக்கும். கனவிலும் வந்து விடுவாள். ஆரம்பத்தில் அதிக அன்பும், பின்னர் சற்று மங்கியதாகவும் தோன்றுகிறதா? அவருடன் இருக்கமுடியாத நேரத்தில் வேதனையை உணர்கிறீர்களா, முத்தமிடும் எண்ணமும், தழுவிக் கொள்ளும் எண்ணமும் அதிகரிக்கிறதா? இதற்கு பெயர் `பப்பி லவ்’. பருவ வயதில் தோன்றும் ஆரம்ப நிலைக் காதல் அனேகமாக இந்த வகையைச் சார்ந்தது.

7. எப்போதும் அவரை பற்றிய நினைப்பும், அவருடனேயே இருக்க வேண்டும் என்ற நினைப்பும் வருகிறதா? அவர்தான் உங்கள் வாழ்க்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர் என்று நினைக்கிறீர்களா? அவருக்காக அனைத்தையும் விட்டுத் தரவும் சம்மதிக்கிறீர்களா, மோகம், சிற்றின்பம், முத்தமிடுதல், தழுவிக் கொள்ளும் உணர்ச்சி, இதயத்துடிப்பு அதிகரிப்பது போன்ற உணர்வுகள் இருக்கிறதா? உங்கள் காதல் உணர்ச்சிமிக்கது. இருவருக்கும் இதே உணர்வு இருந்தால் தவறில்லை. ஒருவர் மட்டும் அதிகமாக உணர்ச்சி வசப்படுவது விபரீத விளைவுகளை உண்டாக்கும்.

8. `எனக்கு காதல் வந்துவிட்டது என்று தோன்றுகிறது, அவளை பிரியவே கூடாது. நான் பார்த்ததிலே அவள்தான் அழகு, அவளை எப்படியாவது மடக்கிவிட வேண்டும்’ என்று நினைத்து சாகசங்களைச் செய்வது என்று இருக்கிறீர்களா? அவரது அழகில் உணர்ச்சி தூண்டப்படுவது, தகாத கற்பனைகளிலும் மிதப்பது என்று இருந்தால் உங்கள் காதல் இனக்கவர்ச்சி வகையைச் சார்ந்தது. `டீன் ஏஜ்’ பருவத்தில் ஏற்படும் உணர்வுகள் இத்தகையதாக இருக்கிறது. அன்பு கூடி அனுபவம் முற்றியதும் இனிய காதல் மீண்டும் மலரும்.

நன்றி : Tamil CNN

04 September 2010

வாட்டர் தெரப்பி தெரியுமா?



உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண்ணீர். என்ன சிரிக்கிறீங்க? உண்மை தான். இந்த செலவே இல்லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவது தான் வேதனையான வேடிக்கை.

செலவே இல்லாத தண்ணீரா? என்று திருப்பி கிண்டல் அடிக்காதீர்கள். சென்னையில் உள்ளவர்கள் பெரும்பாலோர், ஏதோ தனியாரிடம் வாங்கி சாப்பிடும் “கேன் வாட்டர்’ தான் நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். இப்போது மெட்ரோ வாட்டர் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அதை குடித்தாலே போதும், ஆனால், காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது.

அதென்ன “வாட்டர் தெரபி?.’ நாம் சாப்பிடும், குடிக்கும் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச்சாரங்களை வெளியேற்றி, சத்துக்களை, திரவ வடிவில் ஏற்று உடலின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன.

இப்படித் தான் கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர்கிறது. தொண்டை வரை காரமாகவோ, இனிப்பாகவோ இருக்கும் எதுவும் உடலில் சத்துக்களை சேர்ப்பதில்லை. நாம் வாய் ருசிக்காக சாப்பிடும் பல வேண்டாத சமாச்சாரங்களும், கழிவுப் பொருளாக நேரடியாக சிறுநீராகவும், மலமாகவும் தான் வெளியேறுகின்றன.

நம் வீட்டில் எப்படி சமையல் அறை, படுக்கையறை, ஹால்,பாத்ரூம், டாய்லெட் உள்ளதோ அது போல நம் உடலிலும் உள்ளது. எல்லாவற்றையும் கழுவி, நல்லதை “டெட்டால்’ ஊற்றி சுத்தம் செய்ய வேண்டாமா? அப்போது தானே உடல் என்ற வீடு, நாறாமல் இருக்கும். அதற்காக தான் அவ்வப்போது நாம் தண்ணீர், திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்பு இருந்த உணவு முறையில் இப்படி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வகுத்து வைத்தனர். இப்போது “லைப் ஸ்டைல்’ எவ்வளவோ மாறி விட்டது. உடலை எப்படியெல்லாம் பாதிக்க வைக்க வேண்டுமோ, அதற்கு நாமே தேவையான கெட்ட சத்துக்கள் அனைத்தையும் நம் உணவுகளின் மூலம் தருகிறோம்.

கொழுப்பு, ஷûகர், ஆயில் என்று எல்லாவற்றையும் சேர்த்து, கடைசியில் ரத்த அழுத்தம், சர்க்கரை, ஹார்ட் பிராப்ளம் என்று எல்லாவற்றையும் உடலில் ஏற்றி விடுகிறோம். இந்த புது “லைப் ஸ்டைலில்’ எதையும் யாரும் கேட்பதாக இல்லை. இந்த லைப் ஸ்டைல் காரணமாக தான், இளைய வயதினர், குழந்தைகள் எல்லாரிடமும் பழங்கள் போன்ற திரவ சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கமே போய்விட்டது.

அதுவும், தண்ணீர் குடிப்பது என்பது அரிதாகி விட்டது. இது பெரும் தவறு. ஏதோ உணவு, சிற்றுண்டி சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். பல ஆயிரக்கணக்கில் பணம் கறந்து சொல்லித் தரப்படும் “வாட்டர் தெரபி’ உட்பட மூலிகை தெரபிகளை நாம் ஏன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது? நீங்கள் ஆரம்பியுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். இது தான் “வாட்டர் தெரபி’ பயிற்சி. இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்க மாட்டீர்களே? என்ன பாட்டிலை வாங்கி டேபிளில் தண்ணீருடன் வைத்திருங்கள். வீட்டிலாகட்டும், ஆபீசிலாகட்டும் மணிக்கொருதரம் தண்ணீர் குடிங்க, பாருங்க, உடல் “கும்ம்ம்’ன்னு இருக்கும். வெயிட் குறைய தண்ணீர் முக்கியம்:

என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன் படாது.

உண்மையில், அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை. உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது.

இப்படி செய்வதால் தான் சிறுநீரக பிரச்னை, குடல் பிரச்னை என்று எதுவும் வராமல் இருக்கிறது சிலருக்கு. ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.
கண்ட கண்ட நொறுக்குத் தீனியை சாப்பிடுவதை விட, பழங்கள் நல்லது. “அப்பா விடட்டும் முதலில்; நான் அப்புறம் விடறேன்!’ இருபது வயதில் ஆரம்பித்த உணவு, பழக்கவழக்கங்கள், நாற்பதுக்கு மேல், உடலில் தங்கள் வேலையை செய்து, எல்லா வியாதிகளையும் வரவழைத்து விடுகிறது. அப்புறம், ஐம்பதில் தான் நமக்கு “விழிப்புணர்வே’ வருகிறது.

நம் பிள்ளைகளுக்கு தான் “அட்வைஸ்’ சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், மகனாவது கேட்கிறானா? “போப்பா, நீ தானே ஓட்டலுக்கு அப்பப்போ அழைச்சிக்கிட்டு போய் ப்ரைடு ரைஸ் சாப்பிடு, நுõடுல்ஸ் சாப்பிடு, பனீர் பட்டர்… அது இதுன்னு சாப்பிட வச்சே…’ என்று பிள்ளைகள் திருப்பி கேட்பார்கள் தானே. அதனால், இன்றைய முப்பதில் இருப்பவர்களா நீங்கள்? வேண்டாமே, இந்த உணவுப் பழக்கங்களில் தவறான சமாச்சாரங்கள். நீங்க விட்டா தான், உங்க பிள்ளைகள் விடுவார்கள்.

இன்னிலேர்ந்து விட்டுவிடுங்கள், ப்ளீஸ். நீச்சல் பயிற்சி நல்லது: நீச்சல் சேம்பியனாக வர வேண்டும் என்றால் தான் நீச்சல் பயிற்சி செய்ய வேண்டுமா? உடல் பயிற்சியில் நீச்சல் பெரும்பங்கு வகிக்கிறது. முன்பெல்லாம் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு நீச்சல் முக்கியம். கிராமங்களில் பிறந்தவர்களுக்கு இதெல்லாம் இல்லாமல் இளமை வாழ்க்கை நகராது.

நகரங்களில் உள்ளவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். பாத்ரூம் குளியலில் கூட ஏதோ காக்காய் குளியல் தான். இதனால் பலருக்கு தண்ணீர் அலர்ஜி கூட வரும். பெரும்பாலோர் வெந்நீரில் குளிக்க இதுவும் காரணம். நல்ல குளிர்ந்த நீரில் குளித்துப் பாருங்கள், அதன் மணமே, தன்மையே தனி. ரிலாக்ஸ் செய்ய, மருத்துவரீதியாக தண்ணீரில் நிற்பதும் ஒன்று.

அதனால், தான் பலரும் டென்ஷனாக, பிசியாக இருந்து வீடு திரும்பினால், உடனே குளிக்கின்றனர். முடிந்தவரை டென்ஷனை போக்கும் தன்மை, குளிர்ந்த நீருக்கு உண்டு. பாதிக்கு பாதி தண்ணீர் வேணும்!: நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? இது தான் பலரின் கேள்வி.

* பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவு அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* இதை ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 டம்ளர் என்று பிரித்துக் கொண்டு தண்ணீர் சாப்பிடலாம்.

* ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

* ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

* தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.

* வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை பிழிந்தோ சாப்பிடலாம்.

* ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பப்பாளி, மாம்பழம், சாத்துக்குடி, கேரட் ஜூஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம்.

* தொண்டை கரகரப்பு இருந்தால்… வெந்நீர், அல்லது வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் கரகர… போச்சு.

நன்றி : TamilCNN

02 September 2010

Creative Pencil Sculptures

Creative Pencil Sculptures



Artists who create beautiful artworks using pencils can't surprise us nowadays. But Dalton Ghetti found a way how to create miniature masterpieces using pencils. He simply carved the alphabet on the tips of 26 pencils, making letters come alive. More images after the break...



---
TSB

31 August 2010

விரும்பினால் மழை வரும்!


விஞ்ஞானம் ஏற்கனவே செயற்கை மழை பெய்விக்கும் முறையை கண்டுபிடித்திருந்தது. குறிப்பிட்ட அளவில் பெரிதான இயற்கை மேகத்திரள் இருந்தால்தான் இந்த முறையில் மழை பெய்விக்க முடியும். தற்காலத்தில் காலம் தவறி பெய்துவரும் மழை, தண்ணீரின் அவசியத்தை நன்கு உணர வைத்திருக்கிறது.

எனவே விரும்பிய நேரத்தில் மழையை வரவழைக்க வேறு வழி உண்டா? ஆராய்ந்த விஞ்ஞானிகள் தற்போது முக்கியக் கட்டத்தை எட்டி உள்ளனர். அதாவது செயற்கையாக மேகத்தை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் மழையை விரும்பும் நேரத்தில் வர வழைக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. அவர்கள் ஆய்வகத்தில் மேகத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இதற்காக மைனஸ் 24 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நீர் நிரம்பிய கொள்கலன் வழியாக அகச்சிவப்புக் (இன்பிராரெட்) கதிர்களைச் செலுத்தினார்கள். அப்போது நீர்த்திவலை ஆவியாகி மேகம் உருவானது.

இதை சாதாரண கண்களாலும் பார்க்க முடிந்தது. ஆய்வக நிலையில் மட்டுமல்லாது வெளிப்பரப்பிலும் இந்த சோதனை வெற்றி பெற்றது. ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஜெரோம் காஸ்பாரியன் கூறியதாவது:-

லேசர் கதிரானது அணுக்களில் உள்ள எலக்ட்ரானை ஒடுக்குவதன் முலம் `ஹைட்ராக்சைல்’ என்ற வேதிப்பொருள் அதிகஅளவில் உருவாவதை ஊக்குவிக்கிறது. இது தொடர்ந்து வினைபட்டு சல்பர் மற்றும் நைட்ரஜன்-டை-ஆக்சைடு உருவாகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளால் நீர் முலக்கூறுகள் அடர்த்தி குறைந்து நீராவி நிலைக்குச் சென்று மேகம் உற்பத்தியாகிறது. இதை கண்கூடாகப் பார்க்கலாம். எங்கள் ஆய்வில் விண்வெளியில் 60 மீட்டர் உயரத்தில் மேகம் உருவாக்கிக் காட்டப்பட்டது.

50 மைக்ரோமீட்டர் (ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கு என்பதுதான் மைக்ரோமீட்டராகும்) அகலமுள்ள நீர் முலக்கூறு அடர்த்தி குறைந்து ஆவியாகும்போது 80 மைக்ரோமீட்டராக விரிவடைகிறது. எனவே குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி அதிகமாக மேகத்திரளை ஏற்படுத்த முடியும்” இவ்வாறு அவர் கூறினார்.

இனி, வள்ளுவன் வாக்குபோல “பெய்” என்க… பெய்யும் மழை!

நன்றி : Tamil CNN

29 August 2010

வெள்ளவத்தை

|||||வெள்ளவத்தை|||||||

கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் - அதிகமாகத் தமிழ் பேசுவோரே வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06).

பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம்.

வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது!
****************************************************

கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு!

நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால்
ஏனைய வெள்ளவத்தைவாசிகளும் கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து!

ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்

பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம் எனினும்
பெருமளவு வெளிநாட்டுப் பணமும் உள்நாட்டில் வாழும் தமிழரில் அதிகம் பணம் உழைப்போரின செல்வாக்கையும் பார்த்தால் இது ஒரு குட்டி லண்டன் அல்லது டொரன்டோ(வேறேதாவது வெளிநாட்டு நகரங்களாயிருந்தாலும் போட்டுக்கலாம்).

அடுக்குமாடிகளின் (அபார்ட்மென்ட்) அணிவகுப்புகள்
ஒவ்வொரு வீதியிலும் இரண்டு மூன்று அடுக்குமாடிகள்
கிடைக்கும் சிறுதுண்டு நிலத்திலும் ஒடுக்கி முடுக்கி ஒரு அபார்ட்மெண்ட் முளைவிடவைக்கும் மூளை படைத்தோர் எங்கள் பொறியிலாளர்!

வீட்டிற்குள்ளே பைப்பில் நீர் வரத்து குறைவெனிலும்
மழை பெய்யும் காலத்தில் வீதியில் குளமே கட்டிப் பாசனம் செய்யலாம்!

எங்கள் வெள்ளவத்தை வீதிகளில் விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒடும்! பென்ஸ்,பீ எம் டபிள்யூ,பஜிரோ,லாண்ட்ரோவர்,பெராரி இன்னும் ரோல்ஸ் ரோய்ஸ் கூடக் காணலாம்.

குண்டு குழி வீதிகளில் குலுங்காமல் இவை பயணிக்க புதியதாய் நுட்பங்கள் யாராவது உருவாக்க வேண்டும் இனி!


பேரம் பேசாமல் கேட்பதை சந்தையில் அள்ளிக் கொடுத்து சாதாரண மரக்கறி விலைகளையும் சர்வதேச சந்தை விலையாக உயர்த்தியவர்களும்
எங்கள் வெள்ளவத்தைத் தமிழரே!

எனினும் தமிழ் மொழியாக்கத்தில் தீவிரமானவர்கள் நாம்!

காய்கறிக் கடைக்காரர் முதல் காக்கிச் சட்டைக்காரர் வரை அனைவருமே தமிழறிவர் வெள்ளவத்தையில்!

பஸ் கண்டக்டர் கூட வெள்ளவத்தை வந்தால்
தமிழிலே பேசித்தான் டிக்கெட் கொடுப்பார்!

பேச்சு வெற்றியளிக்கும் என்பது இங்கே மட்டும் பெருமளவில் உண்மை! பேசிப் பேசியே (தமிழன்) தமிழ் தெரியாதவரும் தமிழிலேயே பேசுவர்!

எட்டுத்திசையும் அச்சமின்றித் தமிழ் முழங்கும் தலைநகரின் தமிழ்த் தலைநகரம்...

தடுக்கி விழுந்தால் ஆலயம்...
தடுமாறி விழுந்தால் சைவக்கடை...
ஊர் முழுவதும் நகைக்கடையும் புடவைக்கடையும்
நிரம்பி வழியும் எம்மவரின் வெளிநாட்டுப் பணத்தினால்!

பொலீஸ் பதிவுகளும் இங்குதான் அதிகம்.
பொலீஸ் கைதுகளும் இங்கு தான் அதிகம்.
வெள்ளை வான்களும் அதிகளவில் அலையும்.
வீதிக்கு வீதி லொட்ஜ்களில் செக்கிங் உண்டு.
எனினும் வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி விடுப்புகள் பேசியும் வீராப்பாய் வீண் வீரம் பேசியும் நிற்கும் எம் இளைஞர்களைக் கண்டால் வாழ்வது நாம் வடக்கிலா கிழக்கிலா என்ற எண்ணம் எட்டிப் பார்க்கும்!

அண்மைக்கால வெள்ளவத்தையில் புதியதோர் மாற்றம்....

ஆன்டிமார் என்ன ஆச்சிமார் கூட நைட்டிகளுடன் சொப்பிங் போகும் நிலை...!

முழங்கால் கீழே கூட மூடியலைந்த காலம் போய் முகம் தவிர வெறெதையும் மூடாத புதிய மகளீர்....

கண்களுக்கு விருந்தளிக்கும் கவர்ச்சி catwalk இப்போது
எங்கள் வெள்ளவத்தையில் சாதாரணம்!

வெறெங்கு எந்த மொழியில் விளம்பரம் செய்தாலும்
வெள்ளவத்தையில் மட்டும் தமிழ் இல்லையெனில்
வியாபாரம் படுத்துவிடும்!

வங்கி வட்டிக்கடை முதல் வாடகைக் கார் வரை!

(அதில் பாதித் தமிழ் தமிழாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை)

காலை வேளைகளில் கடற்கரையோரம் இன்னுமொரு வேடிக்கை..

நாள் முழுதும் சாப்பிட்டு சேர்த்ததெல்லாம் குறைக்க காலில் சப்பாத்து அணிந்து அங்கிள்மாரும், ஆன்டிமாரும் அணிவகுத்து நடை பழகுவார்கள்..

உடல் மெலிவோ,கொழுப்போ காலையில் பீச் வோக்கிங் போகாவிட்டால் பாஷன் இல்லைப் பாருங்கோ..

நம்ம வெள்ளவத்தைப் பெண்களின் தமிழே தனியான தமிழ் தான்..

ஆங்கிலேய அழகிகளும் தோற்றுப் போவர் அவர்கள் ஆங்கில உச்சரிப்பில் ..

ஆனாலும் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று மிக்ஸ் பண்ணி மிதப்புக் காட்டுவதில் எங்கள் வெள்ளவத்தை பெண்மணிகளை யாருமே வெல்ல முடியாது

(நாங்களும் தான் அந்த ஸ்டைலில் டமில் பேசப் பார்க்கிறோம்.. ம்கூம் முடியவே இல்லை.. அது எங்கள் பெண்களுக்கு மட்டுமே முடியுது)

குண்டுகள் எங்கு வெடித்தாலும் குண்டுகளை எங்கே போட்டாலும் கோவில்கள் எங்கள் பெண்களால் நிறையும்.

அவருடல்களில் தங்கங்கள் விளையும்..
உடல் தழுவிப் பட்டாடைகள் நெளியும்!

கல்யாணங்களோ காசால் களைகட்டும்..
தமிழ்நாடும் தோற்றுப் போகும் தடல்புடலில்.

கிடைக்கும் நிலமெல்லாம் கோடி கொடுத்து வாங்கவும்
நம்மவர் தயாரென்பதால் இலங்கையின் வேறு பல கோடிகளுக்கு ஓடிவிட்டார்கள் சிங்களவர்

வெகுவிரைவில் வெள்ளவத்தை முழுவதும்..... (இனிமேல் எல்லாமே நாங்கதான்)

நன்றி : அதிசஜன் என்கிற விஜயகுமார்

28 August 2010

World’s Top 10 Longest Single Span Bridges


World's Top 10 Longest Single Span Bridges

1. Akashi-Kaikyo Bridge, Japan – 1,991 m


The Akashi-Kaikyo Bridge in Japan heads the list of the top 10 longest single spand bridges in the world. Europe's longest singel span bridge is the Great Belt Bridge in Denmark, although current plans for a bridge between mainland Italy and Sicily across the Messina straights would surpass it if given the go ahead. The Tsing Ma (Hong Kong to China), has the longest span for a bridge with both road and train traffic. More Images after the break...

2. Xihoumen Bridge, China – 1,650 m

3. Great Belt Bridge, Denmark – 1,624 m

4. Runyang Bridge, China – 1,490 m

5. Humber Bridge, England – 1,410 m

6. Jiangyin Suspension Bridge, China – 1,385 m

7. Tsing Ma Bridge, China – 1,377 m

8. Verrazano Narrows Bridge, USA – 1,298 m

9. Golden Gate Bridge, USA – 1,280 m

10. Yangluo Bridge, China – 1,280 m


நன்றி : TSB

27 August 2010

அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி ...(காணொளி இணைக்கப்பட்டுள்ளது)


கடுமையான துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ரத்தக் கண்ணீர் வடித்தேன் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்திய சிறுமி உண்மையிலேயே ரத்தக் கண்ணீர் வடிக்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ட்விங்கிள் திவிவேதி. 13 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

இந்த சிறுமி அழ ஆரம்பித்தால், கண்ணில் கண்ணீர் வருவதற்கு பதில் ரத்தம் வடிகிறது. அதுமட்டு மல்லாமல் கை, கால், தலை என உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து ரத்தம் வடிகிறது.

இந்த பிரச்னையால் பள்ளிப் படிப்பையும் தொடர முடியாமல் உள்ளார். ஏற்கனவே படித்து வந்த பள்ளி நிர்வாகம் வெளியில் அனுப்பி விட்ட நிலையில் வேறு பள்ளியிலும் சேர்க்க மறுக்கின்றனர்.

இதுவரை இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்ததே இல்லை என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், ரத்தம் உறையாததே இதற்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ட்விங்கிளின் உடல்நிலையை பரிசோதித்தேன். உடலில் எந்த இடத்திலும் காயம் எதுவும் இல்லாத நிலையில் அழும்போது, ரத்தம் பல இடங்களிலிருந்து வருகிறது.

இதுவரை இப்படி ஒரு பிரச்னையை பார்த்ததே இல்லை என இங்கிலாந்தின் பிரபல மருத்துவர் ஜார்ஜ் புக்கனன் தெரிவித்தார். 11ம் வயதில் முதன் முதலாக அழும் போது இப்படி ரத்தம் வந்தது. ஆனாலும் ரத்தம் வருவதால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிறிது நேரத்துக்கு தலை வலியும் உடல் சோர்வாகவும் உள்ளது.

மேலும், துணி முழுவதும் ரத்தக் கறை படிந்து அசுத்தமாகி விடுகிறது, மற்றவர்கள் என்னை வெறுக்கிறார்கள். எனவே, இப்போது அழுவதை நிறுத்திக் கொண்டேன் என ட்விங்கிள் தெரிவித்துள்ளார். எனது மகளின் பிரச்னை தீர, கோயில், சர்ச், தர்கா என அனைத்துக்கும் சென்று வந்தேன்.

பலன் கிடைக்கவில்லை. சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான வசதியும் எங்களிடம் இல்லை என ட்விங்கிளின் தாய் நந்தினி தெரிவித்துள்ளார். இந்த சிறுமி, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் மூலம் நேரடியாக சிகிச்சை உதவி கேட்க உள்ளார்.

Click here for watch Video

நன்றி : TamilCNN

26 August 2010

பணமே இல்லாமல் வாழும் மனிதன்



லண்டன், : இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டன் நகரை சேர்ந்தவர் மார்க் பாயல் (31). கடந்த 2 வருடமாக ஒரு பைசா கூட செலவு செய்யாமல், பணமே இல்லாமல் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகிறார். இங்கிலாந்தின் ப்ரீசைக்கிள் அமைப்பு இவருக்கு கேரவன் வேன் ஒன்றை வழங்கியிருக்கிறது. தனக்கு சொந்தமான பண்ணையில் இந்த கேரவனை நிறுத்தியிருக்கிறார். அதுதான் இவரது வீடு.

பண்ணையில் சொந்தமாக பயிரிட்டு தனக்கான உணவை சேகரித்துக் கொள்கிறார். விறகு அடுப்பைத்தான் உபயோகிக்கிறார். சூரிய ஒளி மூலம் தேவையான அளவு மின்சாரத்தை தயாரித்துக் கொள்கிறார். (பைசா இல்லாத பரிசோதனை ஆரம்பிப்பதற்கு முன் மார்க்பாயல் வாங்கியது இக் கருவி). மொபைல் போன் வைத்திருக்கிறார். ஆனால் இன்கமிங் கால் மட்டுமே.

சூரியஒளியால் இயங்கும் லேப்டாப்பும் உள்ளது. குளிர்ந்த நீரில்தான் குளிக்கிறார், துவைக்கிறார். துவைப்பதற்கு மட்டும் இரண்டு மணி நேரம் ஆகிறது என்பது மட்டுமே இவரது கவலை. ஐபாட் தேவை இல்லை. என் வீட்டை சுற்றி பறவைகள் இனிய குரலால் பாடுகின்றன. அந்த ரம்மியத்துக்கு ஈடாகுமா ஐபாட் இசை என்கிறார். டூத்பேஸ்ட் உபயோகிப்பது இல்லை.

மீன் முள்ளும் விதைகளையும் கலந்து அரைத்த ஒரு மாவை பயன்படுத்திக் கொள்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் ஒரு பப்பில் இருந்தபோதுதான் மார்க் பாயலுக்கு இந்த யோசனை உதித்திருக்கிறது. உலகின் அத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது பணம்தான் என்று அவருக்கு தெரியவந்தது.

அடுத்த தினத்தில் இருந்து பணத்தை உதறி, இயற்கையோடு இருக்கும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டார். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். இந்த உலகில், என்னைப் போல் பணமே இல்லாமல் வாழ நினைக்கும் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க முடிந்தால் அதுவே என் அதிர்ஷ்டம் என சிரித்தபடி சொல்கிறார்.

நன்றி : TamilCNN

22 August 2010

கருந்துளை சிக்கியது - Black Hole


முதன் முறையாக ஒரு கருந்துளையின் இருப்பிடம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை கருந்துளை கற்பனைப் பொருளாகவும் கருத்தளவில் மட்டுமே நிரூபிக்கப்பட்டதாவும் இருந்தது.

பூமிக்கு மிக அருகில் (பயப்பட வேண்டாம்) 7800 ஒளியாண்டுகளுக்கு அப்பால் சிக்னஸ் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. black_holeபக்கத்திலிருக்கும் ஒரு அப்பாவி நட்சத்திரத்தின் புற அடுக்கு வாயுவை அந்த கருந்துளையானது உறிஞ்சிக் கொண்டிருப்பது தெரிந்தது.

நேரடியாக அந்த நட்சத்திர வாயு அதனுள் நுழையாமல் சற்று சுற்றி வளைத்தபடி செல்வதால் அதிலிருந்து அபரிமிதமாக எக்ஸ் கதிர்கள் வெளிப்படுகிறது. இந்த எக்ஸ் கதிர் வெளிப்பாடுதான் கருந்துளையைக் காட்டிக் கொடுத்திருக்கிறது.

கருந்துளைகள் என்பவை தமது சொந்த நிறையீர்ப்பு அழுத்தத்தால் சுருங்கி நசுக்கப்பட்டு ஒற்றைப் புள்ளியாக மாறிவிட்ட நட்சத்திரம். சுருங்கிவிட்டபோதிலும், அளப்பரிய தனது நிறையீர்ப்பு விசையால் ஒளிகூட அதைவிட்டு வெளியேற முடிவதில்லை.

அதனால் கருந்துளை நமது பார்வையில் படுவதில்லை. அதன் இருப்பை மறைமுகமான அனுமானத்தின் பேரில்தான் ஊர்ஜிதம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது நேரடியான சாட்சியம் கிடைத்ததால் கருந்துளையின் இருப்பு நிச்சயமாகி உள்ளது என சர்வதேச விண்வெளிக்குழு அறிவித்துள்ளது.

நன்றி : TamilCNN

21 August 2010

Beauty of Mathematics !!!!!!!

Beauty of Mathematics !!!!!!!


1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321


1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111


9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888


Brilliant, isn't it?


And look at this symmetry:


1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111 = 12345678987654321


Now, take a look at this...

101%

From a strictly mathematical viewpoint:

What Equals 100%?
What does it mean to give MORE than 100%?

Ever wonder about those people who say they are giving more than 100%?

We have all been in situations where someone wants you to
GIVE OVER 100%.

How about ACHIEVING 101%?

What equals 100% in life?

Here's a little mathematical formula that might help
answer these questions:

If:
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Is represented as:
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26.

If: 
H-A-R-D-W-O- R- K
8+1+18+4+23+ 15+18+11 = 98%

And: 
K-N-O-W-L-E- D-G-E
11+14+15+23+ 12+5+4+7+ 5 = 96%

But: 
A-T-T-I-T-U- D-E
1+20+20+9+20+ 21+4+5 = 100%

THEN, look how far the love of God will take you: 

L-O-V-E-O-F- G-O-D
12+15+22+5+15+ 6+7+15+4 = 101%

Therefore, one can conclude with mathematical certainty that:

While Hard Work and Knowledge will get you close, and Attitude will get you there, It's the Love of God that will put you over the top!

It's up to you if you share this with your friends & loved ones just the way I did..

நன்றி : TSB

16 August 2010

உங்கள் புகைப்படத்தை எவ்வாறு எழுத்துருவிற்கு மாற்றுவது (Photo to Text) ?

உங்கள் புகைப்படத்தை எவ்வாறு எழுத்துருவிற்கு மாற்றுவது (Photo to Text) என்பதை பற்றியது தான் இந்த சிறிய பதிவு. இந்த சேவையை பெற்றுக்கொள்ள photo2text என்ற இந்த இணைப்பை அழுத்துங்கள்.

இதில் முதலாவதாக நீங்கள் எழுத்துருவாக மாற்ற விரும்பும் புகைப்படத்தை தரவேற்றி பின்னர் அதில் உள்ள Submit பொத்தானை அழுத்துங்கள். தற்போது உங்கள் புகைப்படம் எழுத்துருவாக மாற்றப்பட்டு கொண்டிருக்கும்.


எழுத்துருவாக மாற்றப்பட்ட உங்கள் புகைப்படம் கீழே உள்ளது போல காட்சி அளிக்கும்.

பின்னர் அதில் உள்ள Download Now என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக Text document (.txt) வடிவில் உங்கள் புகைப்படத்தை எழுத்துருவாக பெற்றுக்கொள்ளலாம்.


நீங்கள் விரும்பினால் உங்கள் எழுத்துரு படத்தின் Brightness, Character என்பவற்றையும் மாற்றியமைத்துக்கொள்ளலாம். அதனை மாற்றியமைப்பதற்கு Brightness adjustments, Character Set என்பவற்றை பயன்படுத்தி உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமையுங்கள். என்னுடைய இந்தப் பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

எழுத்துரு இணைப்பு : Text Document
இணைப்பு : http://www.photo2text.com

நன்றி : TSB

15 August 2010

பூமியை தாக்க தயாராகிறது சூரியப் புயல்: உலகை எச்சரிக்கிறது "நாசா' அமைப்பு





சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மின் கிரிட் அதிகளவு வெப்பம் அடைந்தது; விமானங்களின் எலக்ட்ரானிக் கருவிகள் பழுதடைந்தன; செயற்கைக்கோள்கள், கப்பலில் உள்ள கருவிகள் செயல்படாமல் நின்றன. இதற்கு காரணம், சூரியன் தனது ஆழ்ந்த உறக்கத்தை கலைத்து விழித்துக் கொண்டதால் அதிகபட்ச மின்காந்த சக்தியை வெளிப்படுத்தியது தான். புயலாக வெளிப்பட்ட அந்த மின்காந்த சக்தி பூமியை தாக்கியது. சூரியன் அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்தியதால் தான் பூமியில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதேபோன்று, சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013ல் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "மின்காந்த சூப்பர் புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்பட்டு பூமி பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, அவசர சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று மின்காந்த சூப்பர் புயல் குறித்து நாசா புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. "சூரியனின் மின்காந்த புயல் வரப்போகிறது என்று தெரியும். ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தெரியாது.

இதனால் செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள் வங்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்னை ஏற்படும். "பெரிய நகரங்களில் மின் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரிசெய்வது கடினமானதாகவும், நீண்ட நாட்களும் ஆகும். சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால் மின்காந்த புயல், மின்னல் தாக்குவது போல் பூமியை தாக்கும்' என்று நாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர் கூறுகிறார். "விண்வெளி வானிலை' என்ற தலைப்பில் வாஷிங்டனில் சமீபத்தில் ஒரு மாநாடு நடந்தது.

இதில் நாசா விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சூரிய மின்காந்த புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் டாக்டர் பிஷ் ஷரின் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டனர். டாக்டர் பிஷ்ஷர் (69) சூரிய மின்காந்த புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது. 



அப்போது, சூரியனின் வெப்பம் மிக அதிகபட்சமாக, 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும். மனிதனின் வாழ்நாளில் இதுபோல், மூன்று, நான்கு முறை சூரியனில் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013ம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வர உள்ளதால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம். எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. இவ்வாறு ரிச்சர்ட் பிஷ்ஷர் எச்சரித்துள்ளார்.

நன்றி : Tamil CNN

14 August 2010

நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை பேஸ்புக்-ல் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்



நம் வீட்டு திருமண நிகழ்ச்சியை உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களும் பார்க்கும் வண்ணம் பேஸ்புக்-ல் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. பிரம்மாண்ட படங்களின் பாடல் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்த காலம் எல்லாம் மாறி இப்போது நம் வீட்டு திருமண நிகழ்ச்சியைக் கூட உலகத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும்
சொந்தங்களுக்கும் நேரடியாக இணையம் மூலம் காட்டலாம். 

பேஸ்புக் தன் பயனாளர்களுக்காக அவர்களது முக்கியமான எல்லா நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பேஸ்புக் லைவ் வீடியோ-வை அறிமுகப்படுத்தியுள்ளது. லைவ் ஸ்டிரிம் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த நேரடி ஒளிபரப்பை அனைத்து அனைத்து நண்பர்களும் நேரடியாக இருக்கும் இடத்தில் இருந்தே பார்க்கலாம். 

இலவசமாக இந்த சேவையை கொடுத்திருப்பதால் ஏற்கனவே சோசியல் நெட்வொர்க்-ல் முன்னனியில் இருக்கும் பேஸ்புக் இனி யாரும் நெருங்க முடியாத தனி இடத்தைப் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பேஸ்புக் லைவ்-ல் வீடியோ பார்க்க விரும்பும் நபர்கள் இந்த முகவரியைச் சொடுக்கி பார்க்கலாம்.

நன்றி : வின்மணி  

10 August 2010

தேளின் நீளம் எட்டு அடி-வியக்க வைக்கும் தகவல்

39 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் தேள் ஒன்றின் உறைந்த படிமங்கள் செர்மனி நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் வியக்க வைக்கும் தகவல் என்னவென்றால் அந்த காலத்தில் வாழ்ந்த இந்த தேளின் நீளம் எட்டு அடி என்பதே!


மனிதனை விட உயரமான பூச்சியினங்கள் துவக்க காலத்தில் வாழ்ந்திருக்கின்றன என்னும் இந்தத் தகவல் புதிய ஆராய்ச்சிகளைத் துவங்கும் களமாக அமைந்திருக்கிறது.


இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கடல் தேளின் அதிகபட்ச நீளமே ஐம்பது செண்டீ மீட்டர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு வாழும் இந்த உயிரங்களின் அதிகபட்ச நீளமான முப்பது செண்டீ மீட்டருடன் ஒப்பிடுகையில் பழைய கால 8 அடி என்பது அதிர்ச்சிகரமான அளவாக இருக்கிறது.


அந்த காலத்தில் வாழ்ந்த கரப்பான்பூச்சி, தட்டான் போன்ற பூச்சிகளும் இத்தகைய ராட்சத உருவம் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு என்னும் சிந்தனையை இந்த படிமங்கள் கொடுத்திருக்கின்றன.


அந்த காலத்தில் நிலவிய அதிகபட்ச உயிர்வழியும், சீர்குலையாத இயற்கையும், அஞ்சி ஓடத் தேவையில்லாத வாழ்க்கை முறையும் அவற்றை ராட்சத உருவங்களாக உலவ விட்டிருக்கலாம் எனவும் அந்த நிலை மாற மாற அவற்றின் உருவத்திலும் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


ஆராய்ச்சியாளர்கள் ஆளுக்கொரு கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் எட்டு அடி உயர தேள் ஒன்று வீட்டு சமையல் அறையில் நுழைவதைக் கற்பனை செய்து பார்த்தால் பகீரென்கிறது!

நன்றி : தாளம் NEWS

08 August 2010

நம் கணினிக்கு ஆகும் மின்சார செலவை ஒரே நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்.

நம் கணினிக்கு தினசரி ஆகும் மின்சார செலவை துல்லியமாக கண்டுபிடிக்கலாம். திரைக்கு (Monitor) ஆகும் மின்சாரம் முதல் டிஸ்க் (வன்தட்டு) -க்கு ஆகும் மின்சாரம் வரை அத்தனையையும் மிகச்சரியாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.


கண்டுபிடிப்பில் கூகுள்  மட்டுமல்ல நாங்களும் தான் என்று சொல்லும் அளவிற்கு ’தல’ மைக்ரோசாப்ட்-ன் அடுத்த கண்டுபிடிப்பு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. கணினிக்கு ஆகும் மின்சார செலவை மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கலாம் என்ற புது சாதனையை மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர். மென்பொருளின் பெயர் ”ஜோல் மீட்டர்” இந்த மென்பொருளை இங்கு இருக்கும் சுட்டியை சொடுக்கித் தரவிரக்கிக் கொள்ளுங்கள்.


Download Here...


கணினி ஆன் செய்ததில் இருந்து இதுவரை எவ்வளவு மணி நேரம் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் இதற்கு ஆகும் மின்சாரம் என்ன என்பதை கிலோவாட்ஸ் -ல் நமக்கு சொல்கின்றனர். நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்த நாட்டின் மின்சார வரியைப் போட்டு நாம் எளிதாக கண்டுபிடிக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


நன்றி:- வின்மணி

07 August 2010

கடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்



கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம் என்பதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.


கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம். இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.


மென்பொருளின் பெயர் பிலிங். இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம். 


விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது. மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. 


கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும். இந்த முகவரியைச் சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.


Download Here...

நன்றி:- வின்மணி

05 August 2010

Interesting things You may not Know

Things You may not Know


1. CocaCola was originally green.



2. The most common name in the world is Mohammed.

3. The name of all the continents ends with the same letter that they start with.

4. The strongest muscle in the body is the tongue.

5. There are two credit cards for every person in the United States.


6. TYPEWRITER is the longest word that can be made using the letters only on one row of the keyboard.

7. Women blink nearly twice as much as men!..

8. You can't kill yourself by holding your breath..

9. It is impossible to lick your elbow.


10. People say "Bless you" when you sneeze because when you Sneeze, your heart stops for a millisecond.


11. It is physically impossible for pigs to look up into the sky.


12. The "sixth sick sheik's sixth sheep's sick" is said to be the
toughest tongue twister in the English language.

13. If you sneeze too hard, you can fracture a rib. If you try to
Suppress a sneeze; you can rupture a blood vessel in your head or neck and die.

14. Each king in a deck of playing cards represents great king from History. "Spades" King David; "Clubs" Alexander the Great;" Hearts" Charlemagne; "Diamonds" Julius Caesar.


15. 111,111,111 x 111,111,111 = 12,345,678,987, 654,321

16. If a statue of a warrior on a horse has both front legs in the air, the person died in battle. If the horse has one front leg in the air, the person died as a result of wounds received in battle.If the horse has a all four legs on the ground, the person died of natural causes.

17 What do bullet proof vests, fire escapes, windshield wipers and laser printers all have in common?
Ans. All invented by women.

18. Honey This is the only food that doesn't spoil.


19. A crocodile cannot stick its tongue out.


20. A snail can sleep for three years.


21. All polar bears are left handed.

22. American Airlines saved $40,000 in 1987 by eliminating one olive from each salad served in firstclass.

23. Butterflies taste with their feet.


24. Elephants are the only animals that can't jump.

25. In the last 4000 years, no new animals have been domesticated.

26. On average, people fear spiders more than they do death.


27. Shakespeare invented the word 'assassination' and 'bump'.

28. Stewardesses is the longest word typed with only the left hand.

29. The ant always falls over on its right side when intoxicated.


30. The electric chair was invented by a dentist.

31. The human heart creates enough pressure when it pumps out to the body to squirt blood 30 feet.

32. Rats multiply so quickly that in 18 months, two rats could have over million descendants.

33. Wearing headphones for just an hour will increase the bacteria in your ear by 700 times.


34. The cigarette lighter was invented before the match.

35. Most lipstick contains fish scales.


36. Like fingerprints, everyone's tongue print is different

37. And finally 99% of people who read this will try to lick their elbow
TSB

பகல் தீண்டாத இரவுகள் இங்கு இல்லை...
காதல் தீண்டாத இதயம் இங்கு இல்லை...
தீண்டிய இதயம் நிலையாக வாழ்வதில்லை...
நிலையாக வாழும் இதயம் காதலை விட்டு விலகுவதுமில்லை...

“நட்பு மலர்கள்” பிரிவால் வாடினாலும்
அதன் “வாசம்” என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும், சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள் இருப்பதினால் மட்டுமே...!
பாலில் கலந்த நீரைப்போல எம் இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால் நீரிலிருந்தும் பாலை மட்டும் பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம் இரத்தத்திலிருந்து நம் நட்பை பிரிப்பதென்றால்...
எம் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தால் மட்டுமே...!!

சிலர் அன்பை வார்த்தைகளால் உணரலாம்...
சிலர் அன்பை செயல்களால் உணரலாம்....
சிலர் அன்பை உணர்வுகளால் உணரலாம்....
ஆனால் என் அன்பு புரியாது....
அதை காலங்கள் உணர்த்தும் போது.. கண்கள் கலங்கும்...
காரணம்... உயிர் பிரிந்து விடும்....
உங்கள் வருகைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்... மீண்டும் வருக...!