26 August 2010

பணமே இல்லாமல் வாழும் மனிதன்



லண்டன், : இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டன் நகரை சேர்ந்தவர் மார்க் பாயல் (31). கடந்த 2 வருடமாக ஒரு பைசா கூட செலவு செய்யாமல், பணமே இல்லாமல் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகிறார். இங்கிலாந்தின் ப்ரீசைக்கிள் அமைப்பு இவருக்கு கேரவன் வேன் ஒன்றை வழங்கியிருக்கிறது. தனக்கு சொந்தமான பண்ணையில் இந்த கேரவனை நிறுத்தியிருக்கிறார். அதுதான் இவரது வீடு.

பண்ணையில் சொந்தமாக பயிரிட்டு தனக்கான உணவை சேகரித்துக் கொள்கிறார். விறகு அடுப்பைத்தான் உபயோகிக்கிறார். சூரிய ஒளி மூலம் தேவையான அளவு மின்சாரத்தை தயாரித்துக் கொள்கிறார். (பைசா இல்லாத பரிசோதனை ஆரம்பிப்பதற்கு முன் மார்க்பாயல் வாங்கியது இக் கருவி). மொபைல் போன் வைத்திருக்கிறார். ஆனால் இன்கமிங் கால் மட்டுமே.

சூரியஒளியால் இயங்கும் லேப்டாப்பும் உள்ளது. குளிர்ந்த நீரில்தான் குளிக்கிறார், துவைக்கிறார். துவைப்பதற்கு மட்டும் இரண்டு மணி நேரம் ஆகிறது என்பது மட்டுமே இவரது கவலை. ஐபாட் தேவை இல்லை. என் வீட்டை சுற்றி பறவைகள் இனிய குரலால் பாடுகின்றன. அந்த ரம்மியத்துக்கு ஈடாகுமா ஐபாட் இசை என்கிறார். டூத்பேஸ்ட் உபயோகிப்பது இல்லை.

மீன் முள்ளும் விதைகளையும் கலந்து அரைத்த ஒரு மாவை பயன்படுத்திக் கொள்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் ஒரு பப்பில் இருந்தபோதுதான் மார்க் பாயலுக்கு இந்த யோசனை உதித்திருக்கிறது. உலகின் அத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது பணம்தான் என்று அவருக்கு தெரியவந்தது.

அடுத்த தினத்தில் இருந்து பணத்தை உதறி, இயற்கையோடு இருக்கும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டார். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். இந்த உலகில், என்னைப் போல் பணமே இல்லாமல் வாழ நினைக்கும் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க முடிந்தால் அதுவே என் அதிர்ஷ்டம் என சிரித்தபடி சொல்கிறார்.

நன்றி : TamilCNN

No comments:

Post a Comment

பகல் தீண்டாத இரவுகள் இங்கு இல்லை...
காதல் தீண்டாத இதயம் இங்கு இல்லை...
தீண்டிய இதயம் நிலையாக வாழ்வதில்லை...
நிலையாக வாழும் இதயம் காதலை விட்டு விலகுவதுமில்லை...

“நட்பு மலர்கள்” பிரிவால் வாடினாலும்
அதன் “வாசம்” என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும், சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள் இருப்பதினால் மட்டுமே...!
பாலில் கலந்த நீரைப்போல எம் இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால் நீரிலிருந்தும் பாலை மட்டும் பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம் இரத்தத்திலிருந்து நம் நட்பை பிரிப்பதென்றால்...
எம் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தால் மட்டுமே...!!

சிலர் அன்பை வார்த்தைகளால் உணரலாம்...
சிலர் அன்பை செயல்களால் உணரலாம்....
சிலர் அன்பை உணர்வுகளால் உணரலாம்....
ஆனால் என் அன்பு புரியாது....
அதை காலங்கள் உணர்த்தும் போது.. கண்கள் கலங்கும்...
காரணம்... உயிர் பிரிந்து விடும்....
உங்கள் வருகைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்... மீண்டும் வருக...!