24 July 2010

500 மில்லியன் உறுப்பினர்களை நெருங்கி பேஸ்புக் சாதனை

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் இதுவரை 500 மில்லியன் உறுப்பினர்களை பெற்றிருப்பதாக அதன் நிறுவனர் இன்று அறிவித்துள்ளார். இந்த தொகையானது உலக மொத்த சனத்தொகையில் 8 சதவீதமாகும்.

400 மில்லியன் பயனாளிகள் பேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக வெளியான அறிவிப்பே இதன் எண்ணிக்கை விரைவில் 500 மில்லியனாக உயர காரணமாய் அமைந்தது.

பேஸ்புக் வாயிலாக உலகில் உள்ள 500 மில்லியன் பேர் தங்கள் நண்பர்களுடனும் , உடன் பணி புரிந்தவர்களுடனும் தொடர்பில் இருப்பதாக இந்நிறுவன முதன்மை செயலர் மார்க் ஜுக்கேர்பெர்க் இன்று காலை அறிவித்தார்.

இந்த சாதனையை கொண்டாடும் வகையில் பேஸ்புக் கதைகள் என்ற புதிய பயன்பாடு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் இதில் உறுப்பினர்கள் நிஜ வாழக்கை கதைகளை எழுதுவதோடு அதை பிற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

பேஸ்புக் சமூகவலை தளமானது 2004ம் ஆண்டு மார்க் ஜுக்கேர்பெர்க் என்பவரினால் அவரது நண்பர்களான எடுயுரடொ சவெரின் , டஷ்டின் மொஸ்கொவிட்ஷ் மற்றும் கிரிஷ் ஹக்ஷ் ஆகியோரின் உதவியுடன் உருவாக்கப்பட்டதாகும்.

இவர்கள் அனைவரும் ஹார்ட்வார்ட் பலகலைக் கழகத்தில் ஒன்றாக படித்து வந்தனர். மாணவர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சமூக வலைத்தளம் தற்போது உலகம் முழுதிலும் சுமார் 1400 பேருக்கு பணி வாய்ப்பினையும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

பகல் தீண்டாத இரவுகள் இங்கு இல்லை...
காதல் தீண்டாத இதயம் இங்கு இல்லை...
தீண்டிய இதயம் நிலையாக வாழ்வதில்லை...
நிலையாக வாழும் இதயம் காதலை விட்டு விலகுவதுமில்லை...

“நட்பு மலர்கள்” பிரிவால் வாடினாலும்
அதன் “வாசம்” என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும், சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள் இருப்பதினால் மட்டுமே...!
பாலில் கலந்த நீரைப்போல எம் இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால் நீரிலிருந்தும் பாலை மட்டும் பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம் இரத்தத்திலிருந்து நம் நட்பை பிரிப்பதென்றால்...
எம் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தால் மட்டுமே...!!

சிலர் அன்பை வார்த்தைகளால் உணரலாம்...
சிலர் அன்பை செயல்களால் உணரலாம்....
சிலர் அன்பை உணர்வுகளால் உணரலாம்....
ஆனால் என் அன்பு புரியாது....
அதை காலங்கள் உணர்த்தும் போது.. கண்கள் கலங்கும்...
காரணம்... உயிர் பிரிந்து விடும்....
உங்கள் வருகைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்... மீண்டும் வருக...!